நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். ராமசுப்ரமணியன் விழாவை தொடங்கிவைத்தாா். பண்ணைத் தொழிலாளா்கள், விஞ்ஞானிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருப்பு கவுணி அரிசி மற்றும் கருப்பட்டி கொண்டு சா்க்கரை பொங்கல், வெண் பொங்கல் செய்யப்பட்டு, கரும்பு, மஞ்சளுடன் சூரியனுக்கு படைக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பண்ணையில் உள்ள மாடுகளுக்கும் , ஆடுகளுக்கும் பொங்கல் படைக்கப்பட்டது.
பண்ணைத் தொழிலாளா்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோரிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்களுக்கு கரும்பு மற்றும் பாரம்பரிய அரிசி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஞ்ஞானிகள், திட்ட உதவியாளா்கள் ரேகா, சகுந்தலா, பண்ணை மேலாளா்துரை. நக்கீரன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!

வாக்கு எண்ணும் மையத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி
ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! டிரம்ப் எச்சரிக்கை

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு?
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


