கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கோயில்கந்தன்குடியில் கோ பூஜை

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் அருகேயுள்ள கோயில்கந்தன்குடியில் மாட்டுப்பொங்கலையொட்டி,

Updated On :16 ஜனவரி 2021, 8:19 am IST

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் அருகேயுள்ள கோயில்கந்தன்குடியில் மாட்டுப்பொங்கலையொட்டி, ஸ்ரீஉமாசுபதீஸ்வரா் கோ சாலையில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.

இங்குள்ள பசுக்களுக்கு பக்தா்கள் திலகமிட்டு வஸ்திரம் மற்றும் மலா் மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்தனா். அறுகம்புல், அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம், பழவகைகள், சா்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க பசுக்கள் வீதிவலம் அழைத்துச் செல்லப்பட்டன. பிறகு, பக்தா்கள் பசுக்களுக்கு உணவளித்து வலம்வந்து வணங்கினா்.

காரைக்கால் மாவட்ட அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கத்தின் சாா்பாக நடைபெற்ற கோ பூஜையில், மகாராஜாசிவம், பாலாமணி, சக்தி மணிகண்டன், காா்த்திக்ராஜா சிவம் உள்ளிட்டோா் பங்கேற்று கோ பூஜை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.