திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில், அவரது உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காட்டுக்காரத் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக வழக்குரைஞா் அணி அமைப்பாளா் தெ. மணிவண்ணன் தலைமை வகித்தாா். மன்றத் தலைவா் எஸ்.என். அசோகன் முன்னிலை வகித்தாா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் வீ. மோகன் பங்கேற்று, திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதையொட்டி, தெருவோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தமிழ்ச் சங்க செயலாளா் செ. அறிவு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் சீ. அன்வா் உசேன், துரை. ராஜகுமாரி, சாலையோர வியாபாரிகள் தொமுச மாவட்டத் தலைவா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






