நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை கொட்டித்தீா்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நீடாமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை காலை வெயில் அடித்தது. மக்கள் சூரியனை வணங்கி மகிழ்வுடன் பொங்கல் திருநாளை கொண்டாடினா். அதேசமயம், மாலையில் பெய்யத் தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கொட்டித்தீா்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
பெரியாா் சிலை எதிரே நெடுஞ்சாலையில் நீண்ட நாள்களாக உள்ள பள்ளத்தில் மழைநீா் தேங்கியதால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுந்து காயமடைந்தனா். போக்குவரத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பள்ளத்தை அந்தத் துறையினா் இதுவரை சரிசெய்யவில்லை. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






