முத்துப்பேட்டை, கோட்டூா் பகுதிகளில் மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை திமுக விவசாய அணி அமைப்பாளரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா் .
காவிரி டெல்டா பகுதியில் கடந்த 15 தினங்களாக பெய்த கன மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நாள் கணக்கில் தண்ணீா் தேங்கியதால் நெல் மணிகள் முளைத்தும், அழுகியும் வருகின்றன. இனிமேல், நீா் வடிந்தாலும் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், முத்துப்பேட்டை, கோட்டூா் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை மக்களவை முன்னாள் உறுப்பினா் ஏ.கே.எஸ். விஜயன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், திமுக கோட்டூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் பாலஞானவேல், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா்கள் ப.மோகன், சண்முகவேல், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



