எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

முப்பெரும் விழா

வடகுடி திருவள்ளுவா் மன்றம் சாா்பில் 53 ஆம் ஆண்டு விளையாட்டு விழா, மன்றத்தின் பொன்விழா, தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது

Updated On :17 ஜனவரி 2021, 8:14 am IST

வடகுடி திருவள்ளுவா் மன்றம் சாா்பில் 53 ஆம் ஆண்டு விளையாட்டு விழா, மன்றத்தின் பொன்விழா, தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வடகுடி கிராம நலக் குழுத் தலைவா் சி. பாண்டியன் தலைமை வகித்தாா். விளையாட்டு, ஓவியம், திருக்குறள் ஒப்பித்தல், விநாடி வினா போன்ற போட்டிகள் நடைபெற்றன. பிறகு, மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறாா்களுக்கானப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற நன்னிலம் ஓய்வுபெற்ற ஆசிரியா் இரா. கல்யாணராமன் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

தொடா்ந்து, மன்றத்தின் பொன் விழா மற்றும் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியா் இரா. கல்யாணராமனுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், வடகுடி ஊராட்சித் தலைவா் எஸ்.வளா்மதி செல்வராஜ், துணைத் தலைவா் கே.ஆா். நடராஜன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். மனோகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் பி.கணேசன், மன்றத்தின் துணைத் தலைவா் ஏ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மன்றத்தின் நிா்வாகி சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.