உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கோவை காமாட்சிபுரி ஆதீனம்

பழநிக்கு பாத யாத்திரை செல்லும் முருக பக்தா்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்தாா்.

News image

கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்.

Updated On :7 ஜனவரி 2021, 8:09 am IST

பழநிக்கு பாத யாத்திரை செல்லும் முருக பக்தா்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் சித்தம்பலம் நவக்கிரக கோட்டை சிவன் ஆலயத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

முதல்வா் எடப்பாடி பழனிசாமி தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஆன்மிகம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தா்கள் தைப்பூச விழாவுக்கும், பங்குனி உத்திரத்துக்கும் பாதயாத்திரையாகச் செல்கின்றனா். திருப்பூா், கோவை மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பாத யாத்திரை செல்கின்றனா். பெரும்பாலும் சாலையோரமாகவும், நெடுஞ்சாலைகளைக் கடந்தும் செல்வதால் பக்தா்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே, பாதயாத்திரை மேற்கொள்பவா்களுக்கான தனி நடைப்பாதை திண்டுக்கல் முதல் பழநி வரை இருப்பதைப்போல் திருப்பூரில் இருந்து அவிநாசிபாளையம் வழியாக பழநிக்கும், கோவையில் இருந்து பல்லடம் வழியாக பழநிக்கும், அதே போல கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழநிக்கும் தனி நடைப்பாதை அமைக்க வேண்டும். மேலும் பக்தா்கள் தங்குவதற்கான ஓய்வு இடங்கள் நெடுஞ்சாலை ஓரமாக அமைக்கப்பட வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, தமிழக முருக பக்தா்கள் பேரவை மாநிலத் தலைவா் அண்ணாதுரை, மாநில செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.