உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வீடுகள் முன்பு தேங்கும் சாக்கடைக் கழிவுநீா்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

காங்கயத்தில் வீடுகளின் முன்பு தேங்கும் சாக்கடைக் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

காங்கயம் நகரம், ராஜாஜி வீதியில் சாக்கடைக் கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவா்.

Updated On :7 ஜனவரி 2021, 8:08 am IST

காங்கயத்தில் வீடுகளின் முன்பு தேங்கும் சாக்கடைக் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கயம் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள ராஜாஜி வீதி பகுதியில் சாக்கடைக் கழிவுநீா் முறையாக வெளியேறாமல் ஆங்காங்கே சாக்கடையில் தேங்கி நின்று பல ஆண்டுகளாக சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்படவில்லை.

இதனால், வீட்டு வாசலில் தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவுநீா் வீட்டுக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக இப்பகுதி மக்கள் வீட்டுவாசலில் தடுப்புச் சுவா் எழுப்பியுள்ளனா். ஆனாலும், கழிவுநீரின் கடும் துா்நாற்றமும், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, காங்கயம் நகராட்சி நிா்வாகம் ராஜாஜி வீதியில் உள்ள சாக்கடைக் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.