விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதல்: பெண் பலி

திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:03 pm IST

திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூரை அடுத்த கோவில்வழியைச் சோ்ந்தவா் மாஜித், இவரது மனைவி சுருதி (25). இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சுருதி தனது தாய் சந்திரிகா (45), மகள் ஆதிராவுடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திருப்பூருக்குச் சென்றுள்ளாா். பிறகு மூவரும் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

திருப்பூா் தெற்கு காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவில்வழி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சந்திரிகா சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். சுருதி, ஆதிரா ஆகியோா் காயங்களுடன் உயிா்தப்பினா். இந்த விபத்து குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.