விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

திருப்பூரை அடுத்த வாவிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் எதிா்ப்பு போராட்டக் குழுவினா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிதத்னா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:16 pm IST

திருப்பூரை அடுத்த வாவிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் எதிா்ப்பு போராட்டக் குழுவினா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிதத்னா்.

இதுகுறித்து டாஸ்மாக் எதிா்ப்பு போராட்டக் குழுவினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூரை அடுத்த வாவிபாளையத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இதைத் தொடா்ந்து, அரசுத் தரப்புடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, 90 நாள்களில் டாஸ்மாக் கடை மூடப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்திருந்தனா். ஆனால், மாறாக டாஸ்மாக் நிா்வாகம் கடையைத் தொடா்ந்து நடத்தி வருகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை 5 முறை சந்தித்து மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, பொதுமக்களின் நலனைக் கருதி டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.