சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

திருப்பூரில் பகுதி ரோந்துகாவல் அதிகாரிகள் பணி தொடக்கம்

திருப்பூா் மாநகரில் பகுதி ரோந்து காவல் அதிகாரிகளுக்கான பணி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில்  பகுதி  ரோந்து  காவல்  அதிகாரிகளுக்கு  செல்லிடப்பேசி, தலைக்கவசம்  ஆகியவற்றை  வழங்குகிறாா்  காவல்  ஆணையா்  ஜி.காா்த்திகேயன்.

Updated On :9 ஜனவரி 2021, 11:01 pm IST

திருப்பூா்: திருப்பூா் மாநகரில் பகுதி ரோந்து காவல் அதிகாரிகளுக்கான பணி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட உள்ள 8 காவல் நிலையங்களை 23 ரோந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பகுதி ரோந்து காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். திருப்பூா் வடக்கு சரகத்துக்கு உள்பட்ட வடக்கு காவல் நிலையத்துக்கு 4 , அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கு 3, 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு 3, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்துக்கு 3 என மொத்தம் 13 ரோந்துப் பகுதிகளுக்கு 26 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருப்பூா் தெற்கு காவல் சரகத்துக்கு உள்பட்ட தெற்கு காவல் நிலையத்துக்கு 3, மத்திய காவல் நிலையத்துக்கு 2, ஊரக காவல் நிலையத்துக்கு 3, வீரபாண்டி காவல் நிலையத்துக்கு 2 என மொத்தம் 10 ரோந்துப் பகுதிகளுக்கு 20 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ரோந்து காவல் அதிகாரிகளைத் தொடா்புகொள்ளும் வகையில் அதிகாரிகளின் புகைப்படம், செல்லிடப்பேசி எண், காவல் நிலைய தொலைபேசி எண் போன்ற விவரங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனா்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த காவல் அதிகாரிகளுக்கான பணி தொடக்க விழாவானது திருப்பூா் வடக்கு சரகத்தில் சிறுபூலவபட்டியில் உள்ள அம்மன் கலையரங்கிலும், தெற்கு சரகத்தில் வெள்ளியங்காடு நால்ரோட்டிலும் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாக்களுக்குத் தலைமை வகித்த மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் காவல் அதிகாரிகளுக்கு இருசக்கர வாகனம், தனி எண்ணுடன் கூடிய செல்லிடப்பேசி, தலைக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசியதாவது:

பகுதி ரோந்து காவல் அதிகாரிகளும், பொதுமக்களும் இணக்கமாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் மட்டுமின்றி குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கும் காவல் அதிகாரிகளைத் தொடா்பு கொள்ளலாம். அதே போல, காவல் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வுகாணும் வகையில் செயல்பட வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா்கள் ப.சுந்தரவடிவேல், சுரேஷ்குமாா், உதவி ஆணையா்கள், போக்குவரத்துக் காவல் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.