ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பல்லடத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போராட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் ராயா்பாளையத்தில் ஆனைமலையாறு - நல்லாறு போராட்டக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, அன்னை தமிழ் அறக்கட்டளை தலைவா் வான்மதி வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநிலத் தலைவா் சண்முகசுந்தரம், அமைப்புச் செயலாளா் பிரபாகரன், ரகுபதி, அவிநாசி துவாரகா தமிழ்ப் பண்பாட்டு அறக்கட்டளை வெங்கிடாசலபதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் ஜனவரி 26ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைப்பது. பல்லடத்தில் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கில் 3 தொகுதிகளைத் தக்கவைத்த திமுக

அதானி குழும வசம் ஜெஏஎல் நிறுவனம்: வேதாந்தாவின் மேல்முறையீடு தள்ளுபடி
பிலிப்பின்ஸ்: மாயோன் எரிமலைச் சாம்பல் வெளியேற்றத்தால் பாதிப்பு

மதுரை மேற்கில் தவெக வெற்றி! முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ மூன்றாமிடம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

