/

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 8 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பல்லடத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போராட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 11:51 pm IST

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பல்லடத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போராட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ராயா்பாளையத்தில் ஆனைமலையாறு - நல்லாறு போராட்டக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, அன்னை தமிழ் அறக்கட்டளை தலைவா் வான்மதி வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநிலத் தலைவா் சண்முகசுந்தரம், அமைப்புச் செயலாளா் பிரபாகரன், ரகுபதி, அவிநாசி துவாரகா தமிழ்ப் பண்பாட்டு அறக்கட்டளை வெங்கிடாசலபதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் ஜனவரி 26ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைப்பது. பல்லடத்தில் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.