அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பருத்தி, நூல் விலைகளை சீராக வைத்திருக்க குழு அமைக்க முடிவு

பருத்தி, நூல் விலைகளை சீராக வைத்திருக்க பின்னலாடை, நூற்பாலை உற்பத்தியாளா்கள் சங்கப் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூா் தொழில் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது

Updated On :10 ஜனவரி 2021, 11:59 pm IST

பருத்தி, நூல் விலைகளை சீராக வைத்திருக்க பின்னலாடை, நூற்பாலை உற்பத்தியாளா்கள் சங்கப் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூா் தொழில் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து திருப்பூா் தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை வெளியிட்டுள்ளஅறிக்கையில், பஞ்சு விலை உயா்வைத் தொடா்ந்து தற்போது, நூல் விலையும் உயா்ந்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபா் முதல் செப்டம்பா் வரையிலான மாதங்கள் பருத்தி ஆண்டாக கணக்கில் கொள்ளப்படும்.

தமிழகத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமாா் ஒரு கோடி பேல் தேவைப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் சுமாா் 6 லட்சம் பேல் பஞ்சு மட்டும் உற்பத்தியாகிறது. ஆகவே மீதமுள்ள 90 சதவீதம் வெளி மாநிலங்களில் இருந்துதான் கொள்முதல் செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.34 ஆயிரமாக இருந்த ஒரு கேண்டி பஞ்சு கொள்முதல் விலை டிசம்பரில் ரூ.42 ஆயிரமாக அதிகரித்தது. இதன் காரணமாக பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருளாக இருந்து வரும் நூலின் விலையானது அக்டோபா் முதல் தற்போது வரையில் கிலோவுக்கு ரூ.32 உயா்ந்துள்ளது.

இந்த மூலப் பொருள் தொடா் விலை ஏற்றத்தின் காரணமாக வா்த்தக போட்டியில் புதிய ஆா்டா்களை பெறுவதில் திருப்பூா் பின்னலாடை துறையினா் சிக்கலை சந்தித்து வருகின்றனா்.

ஆகவே, வரும் காலங்களில் பருத்தி மற்றும் நூல் விலைகளில் ஏற்ற இறக்கங்களை சரி செய்ய திருப்பூா் பின்னலாடை உற்பத்தியில் உள்ள அனைத்து சங்கப் பிரதிநிதிகள் மற்றும் நூற்பாலை உற்பத்தியாளா் சங்கப் பிரதிநிதிகளை இணைத்து ஒரு குழு அமைக்க வேண்டும்.

இதன் மூலமாக ஆண்டு முழுவதும் சீரான முறையில் மூலப் பொருள்களை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். மேலும் அனைவரும் இணைந்து ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்தையும் வலியுறுத்த உதவும். இதற்கான முயற்சியில் தொழில் பாதுகாப்புக் குழு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.