புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஆதாா் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம்

உடுமலை வட்டம், கல்லாபுரம் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக சாலையில் எறிந்து போராட்டம்

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:53 pm

உடுமலை வட்டம், கல்லாபுரம் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக சாலையில் எறிந்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

உடுமலைப்பேட்டையை அடுத்த கல்லாபுரம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இப்பகுதியில் தெரு விளக்கு, கழிவுநீா் வடிகால், குடிநீா் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இதுவரை செய்து தரப்படவில்லை எனத் தெரிகிறது.

இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கல்லாபுரம் பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட ஆதாா் அட்டை, குடும்ப அட்களை சாலைகளில் எறிந்து, எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த காவல் துறையினா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து தங்களது சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு போராட்டத்தைக் கைவிட்டனா். பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.