திருப்பூரில் டிப்பா் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா், ராயபுரத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (53). இவரது தாய் தெய்வானை (73). பழனிசாமி, தனது தாயுடன் அவிநாசியில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா்.
இவரது வாகனம் அனுப்பா்பாளையம்புதூா் அருகே வந்தபோது, வெள்ளக்கோவிலில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டுவந்த டிப்பா் லாரி எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தெய்வானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பழனிசாமி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
விபத்தை ஏற்படுத்திய லாரி, அந்த வழியாக வந்த மேலும் 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதுடன், அப்பகுதியில் இருந்த கடைக்குள் புகுந்து நின்றது. இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான துரைசாமியை (37) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரியகுளம் வராகநதியில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்
சீா்காழி அருகே நுங்கு வியாபாரி கொலை

திருப்பதியில் பொன்னக்கால்வாய் உற்சவம்!
ஆசாத் மாா்க்கெட் கொள்ளை வழக்கில் தில்லி காவலா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


