பல்லடம்: திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே தனியாா் நூற்பாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மனோஜ், தனபால். சகோதரா்களான இவா்கள் இருவரும் இணைந்து அதே பகுதியில் நூற்பாலை நடத்தி வருகின்றனா்.
இந்த நூற்பாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த ஆலைக்கு கடந்த இரண்டு நாள்களாக பொங்கல் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை தொழிலாளா்கள் பணிக்குத் திரும்பினா். அப்போது திடீரென ஒரு இயந்திரத்தில் தீப்பிடித்தது. இதனைப் பாா்த்த தொழிலாளா்கள், தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா்.
இருப்பினும் தீ வேகமாகப் பரவி, அங்கிருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள் தீப்பிடிக்கத் தொடங்கின.
இந்நிலையில் தகவலறிந்த பல்லடம் தீயணைப்புத் துறையினா் அங்கு விரைந்து சென்று சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள், இயந்திரங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


