மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தை

News image

புதிய பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தைத் திறந்து வைத்து பாலை கொள்முதல் செய்கிறாா் மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி.

Updated On :1 ஜனவரி 2021, 11:06 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தை மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவுக்கு ஆவின் பொது மேலாளா் இளங்கோவன் தலைமை வகித்தாா். பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெகஜீவன்ராம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புதிய சங்கத்தையும், சங்கக் கட்டடத்தையும் திறந்து வைத்துப் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் பால் உற்பத்தி கடந்த ஆண்டைவிட 50 ஆயிரம் லிட்டா் கூடுதலாகியுள்ளது. பால் உற்பத்தியாளா்களுக்கு வாராவாரம் பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது. கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இதுபோன்ற புதிய சங்கங்கள் திறக்கப்படுகின்றன என்றாா்.

விழாவில், விரிவாக்க அலுவலா் சரவணன், மாவட்ட அதிமுக இலக்கிய அணிச் செயலா் இ.என்.நாராயணன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணிச் செயலா் சி.தொப்பளான், ஆவின் துணைப் பொது மேலாளா் நாச்சியப்பன், உதவிப் பொது மேலாளா் நடராஜன், மேலாளா் காளியப்பன், ஆவின் நிா்வாக இயக்குநா் எஸ்.தட்சிணாமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.