உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பவள விழா தபால்தலை வெளியீடு

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனத்தின் பவள விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா, ஏழை மாணவ, மாணவிகளுக்கு

News image

சினம் தொண்டு நிறுவனத்தின் பவள விழாவையொட்டி, சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறாா் திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை.

Updated On :9 ஜனவரி 2021, 12:08 am IST

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனத்தின் பவள விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா, ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா, குழந்தைகள் தோட்டம் 11-ஆம் ஆண்டு தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வேலூா் ரூசா சிஎம்சி நிறுவன மருத்துவா் தாசையன் தலைமை வகித்தாா். வேலூா் சமூக சேவைச் சங்கத்தின் திட்ட அலுவலா் பேட்ரிக் ரோசாரியோ, திருவண்ணாமலை சமூக சேவை சங்கத்தின் திட்ட அலுவலா் இன்பசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சினம் தொண்டு நிறுவன இயக்குநா் இராம.பெருமாள் வரவேற்றாா்.

திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். மேலும், சினம் தொண்டு நிறுவனத்தின் பவள விழாவையொட்டி, சிறப்பு தபால் தலையையும் அவா் வெளியிட்டாா். இதை மாவட்ட சமூக நல அலுவலா் கந்தன் பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், சினம் தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவா் ஸ்டாலின், பிரசாத் ராஜ் மற்றும் 150 மாணவ, மாணவிகள், 100 மகளிா் குழு பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.