மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் பலி

செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:09 am IST

செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், பைங்கினா் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (37). இவா், அந்தக் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உயா்நிலை குடிநீா்த் தொட்டி இயக்குபவராக பணியாற்றி வந்தாா். வெங்கடேசன் வெள்ளிக்கிழமை காலை செய்யாறு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள மகளிா் விடுதியில் பணியாற்றி வரும் நண்பா் ராஜ்குமாரை பாா்ப்பதற்காகச் சென்றாா்.

அங்கு, மின் பராமரிப்புப் பணி நடைபெற்ற நிலையில், ராஜ்குமாருக்கு வெங்கடேசன் உதவி செய்துகொண்டிருந்தாா். அப்போது, திடீரென வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவா் தூக்கி வீசப்பட்டாா். உடனடியாக வெங்கடேசன் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வெங்கடேசன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.