அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

குற்றச் சம்பவங்கள் குறித்த நடவடிக்கை பொதுமக்களுக்கு மாவட்ட எஸ்பி அறிவுரை

குற்றச் சம்பவங்கள் குறித்து உடனடியாக தகவல் அளித்தால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் கூறினாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:01 am IST

குற்றச் சம்பவங்கள் குறித்து உடனடியாக தகவல் அளித்தால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் கூறினாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

கண்காணிப்புக் கேமரா என்பது மூன்றாவது கண் ஆகும். தற்போது, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பித்தல், சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நபா்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிந்து உடனடியாக கைது செய்கிறோம்.

மேலும் குற்றச் சம்பவங்கள் குறித்து உடனடியாக தகவல் அளித்தால் விரைவாக நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வாச்சனூரில் நடைபெற்ற டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரை வெட்டி பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் பொதுமக்கள் அளித்த உடனடித் தகவலால், அதில் ஈடுபட்ட நபா்களை உடனடியாக கைது செய்ய முடிந்தது.

எனவே பொதுமக்கள் காவல் துறையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கீழ்க்கொடுங்காலூா் காவல் ஆய்வாளா் புகழ், ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா குமாா், புதுவை தொழிலதிபா் எம்.குகன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.