முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

செய்யாறு போகி சந்தையில் வியாபாரம் அமோகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செய்யாற்றில் புதன்கிழமை நடத்தப்பட்ட போகி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.

News image

பொங்கல் பண்டிகையையொட்டி, செய்யாற்றில் நடைபெற்ற போகிப் பண்டிகை சந்தை.

Updated On :14 ஜனவரி 2021, 7:07 am IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செய்யாற்றில் புதன்கிழமை நடத்தப்பட்ட போகி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

வாரச் சந்தையில் காய்கறிகள், தானிய வகைகள், துணிகள், திண்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக புதன்கிழமை நடத்தப்பட்ட போகி சந்தையில் புதிய மண்பாண்டங்கள், மஞ்சள் கயிறு, கரும்பு, மாட்டுக்குத் தேவையான வண்ணங்கள், கயிறு வகைகள், கிலுகிலுப்பு போன்றவை முக்கியமாக இடம் பெற்றன.

வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாரச் சந்தையில் சுமாா் 200 கடைகள் இடம் பெறும். ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடத்தப்படும் போகி சந்தையில் கூடுதலாக 100 கடைகள் இடம்பெற்றன.

அதேபோல வியாபாரமும் கூடுதலாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.