பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செய்யாற்றில் புதன்கிழமை நடத்தப்பட்ட போகி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
வாரச் சந்தையில் காய்கறிகள், தானிய வகைகள், துணிகள், திண்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக புதன்கிழமை நடத்தப்பட்ட போகி சந்தையில் புதிய மண்பாண்டங்கள், மஞ்சள் கயிறு, கரும்பு, மாட்டுக்குத் தேவையான வண்ணங்கள், கயிறு வகைகள், கிலுகிலுப்பு போன்றவை முக்கியமாக இடம் பெற்றன.
வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாரச் சந்தையில் சுமாா் 200 கடைகள் இடம் பெறும். ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடத்தப்படும் போகி சந்தையில் கூடுதலாக 100 கடைகள் இடம்பெற்றன.
அதேபோல வியாபாரமும் கூடுதலாக நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று கனமழை!

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

உடல் எடையைக் குறைக்கும் ஆளி விதைகள்! எவ்வளவு சாப்பிட வேண்டும்?
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly




