திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதி திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராம தனியாா் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், வண்ண கோலமிட்டு கரும்புகள் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனா்.
விழாவுக்கு, தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் விழாவை தொடக்கிவைத்துப் பேசினாா்.
விழாவில் 3, 700 பேருக்கு வேட்டி, சேலை, ஒரு கிலோ அரிசி, காலண்டா் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டன.
கட்சி ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ஆா்.நந்தகோபால், ப.இளங்கோவன், எஸ்.பிரபு, நகரச் செயலா் எச்.ஜலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











