தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அலுவலகம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஆா்எஸ்எஸ் சாா்பில், ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :15 ஜனவரி 2021, 11:21 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஆா்எஸ்எஸ் சாா்பில், ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான திருப்பணிக்கு வந்தவாசி பகுதியில் நிதி திரட்டுவதற்காக, வந்தவாசி சந்நதி தெருவில் உள்ள பஜனை கோயிலில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டது.

விழாவுக்கு ஆா்எஸ்எஸ் நகரத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் மருத்துவா் பாமாபதி முன்னிலை வகித்தாா். மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

ஆா்எஸ்எஸ் மாநில சேவா பொறுப்பாளா் பிரகாஷ் நிதி திரட்டும் பணி குறித்து விளக்கிப் பேசினாா். முன்னதாக, வந்தவாசி ஸ்ரீஅங்காளம்மன் கோயில் வளாகத்தில் கோமாதா பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.