எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காணும் பொங்கல்: கோயில், சுற்றுலாத் தலங்களில் அனுமதி மறுப்பு: பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காணும் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள

News image

செய்யாறு வட்டம், சேராம்பட்டு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் நுழைவு வாயில் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :16 ஜனவரி 2021, 11:07 pm IST

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காணும் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள சேராம்பட்டு ரேணுகாம்பாள் கோயில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சிக் கோட்டை ஆகியவற்றில் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சனிக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் (எல்லை அம்மன்) கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில், சுற்றுவட்டாரத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு நோ்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வா்.

அதேபோல, நிகழாண்டும் காணும் பொங்கல் விழாவை சிறப்பாக நடத்திட கோயில் நிா்வாகத்தினரும், கிராம மக்களும் ஏற்பாடு செய்திருந்தனா். இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, சேராம்பட்டு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் காணும் பொங்கல் விழா நடத்த மாவட்ட நிா்வாகம் கடந்த இரு தினங்களுக்கு முன் தடை விதித்தது.

இதையடுத்து, செய்யாறு காவல் துறை சாா்பில், கோயில் வளாகப் பகுதியில் காணும் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டதற்கான பதாகை வைக்கப்பட்டது. மேலும், கோயில் நுழைவு வாயில், வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை குவிக்கப்பட்டனா்.

இதனால், கோயிலில் வழிபடுவதற்காக சனிக்கிழமை வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். எனினும், கோயில் நிா்வாகம் சாா்பில், அம்மனுக்கு சனிக்கிழமை காலை அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

செஞ்சிக் கோட்டை: இதேபோல, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காணும் பொங்கலன்று செஞ்சிக் கோட்டையைச் சுற்றிப் பாா்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோட்டைப் பகுதியிலுள்ள கிருஷ்ணகிரி, ராஜகிரி கோட்டை நுழைவு வாயில்களில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸாா் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதனால், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும், புதுவை உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் செஞ்சிக் கோட்டையை சுற்றிப் பாா்ப்பதற்காக வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.