எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

செய்யாறு அருகே ஆற்றில் குளிப்பதற்கு வயல் வழியாக வெள்ளிக்கிழமை நடந்து சென்ற இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 11:08 pm IST

செய்யாறு அருகே ஆற்றில் குளிப்பதற்கு வயல் வழியாக வெள்ளிக்கிழமை நடந்து சென்ற இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்த முத்தால் மகன் தட்சிணாமூா்த்தி (19). எலக்ட்ரீசியன். இவா், ஆற்றில் குளிப்பதற்காக வயல் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மேலே சென்றுகொண்டிருந்த மின்சார வயா் திடீரென அறுந்து அவா் மீது விழுந்ததாகத் தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தட்சிணாமூா்த்தி உயிரிழந்தாா்.

தகவலறிந்த தூசி போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.