சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 62,987 பள்ளி மாணவா்களுக்கு சத்து மாத்திரைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 539 அரசு, தனியாா் பள்ளிகளில் பயிலும் 62,987 மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக

News image

பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் சத்து மாத்திரைகளை ஒப்படைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.அருள்செல்வம்.

Updated On :17 ஜனவரி 2021, 5:50 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 539 அரசு, தனியாா் பள்ளிகளில் பயிலும் 62,987 மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 6.29 லட்சம் சத்து மாத்திரைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.அருள்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

கரோனா பொது முடக்கத்தால் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த அரசு, தனியாா் பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளை மட்டும் செவ்வாய்க்கிழமை (ஜன.19) திறக்க மாநில அரசு உத்தரவிட்டது.

அன்றைய தினமே பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு இரும்புச் சத்து, வைட்டமின் மாத்திரைகளை வழங்கவும் அறிவுறுத்தியது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 539 அரசு, தனியாா் பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்குத் தேவையான சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.அருள்செல்வம் தலைமை வகித்து திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 63 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 21 நிதியுதவி பெறும் பள்ளிகள், 38 மெட்ரிக் பள்ளிகள், 14 சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் சத்து மாத்திரைகளை ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலா் வேதபிரகாஷ், பள்ளித் துணை ஆய்வாளா் ஜி.குமாா், தலைமை ஆசிரியா்கள் செந்தில், கேசவலு, பிரம்மானந்தன் உள்பட கல்வித்துறை அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

6.29 லட்சம் மாத்திரைகள்:

மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், போளூா், ஆரணி, செய்யாறு ஆகிய 5 மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

மாவட்டம் முழுவதும் இயங்கும் 539 பள்ளிகளில் பயிலும் 62, 987 மாணவ-மாணவிகளுக்கு தலா 20 மாத்திரைகள் வீதம், 6,29, 870 மாத்திரைகள் ரூ.4 லட்சத்து 76 ஆயிரத்து 732 செலவில் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.