எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

'மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க தகவல் பாதுகாப்பு முக்கியம்'

மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க தகவல் பாதுகாப்பு மிக முக்கியம் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:33 pm

DIN

மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க தகவல் பாதுகாப்பு மிக முக்கியம் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி கிரண் வஷிரெட்டி தெரிவித்ததாவது:
இந்தியாவில் மின்னணு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் அதுகுறித்த தகவல்களை இந்தியாவுக்குள் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் பணப்பரிமாற்ற விவரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனை செயல்படுத்த, நிறுவனங்களுக்கு ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையால், வாடிக்கையாளர்களின் தரவுகளை இனி யாரும் வணிக ரீதியில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பணப்பட்டுவாடா முறை பாதுகாப்புக்கு இது முக்கியமானது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.