
தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) தலைவர் ராம் சேவாக் சர்மாவின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்போது டிராய் தலைவராக பதவி வகிக்கும் ராம் சேவாக் சர்மாவின் பதவிக் காலம் 2018 ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், அவரது பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவர் அப்பதவியில் நீடிப்பார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலையில் டிராய் அமைப்பின் தலைவராக ராம் சேவாக் சர்மாவை மூன்றாண்டுகளுக்கு நியமித்தது.
அவரது பதவிக்காலம் வெள்ளிக்கிழமையுடன் (ஆகஸ்ட் 10) நிறைவடையவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த பதவி நீட்டிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






