நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.1.12 லட்சம் கோடியாக அதிகரிப்பு

இந்தியாவின் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 3:06 pm IST


இந்தியாவின் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து 1,730 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.12 லட்சம் கோடி) மதிப்புக்கு மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இது 1,690 கோடி டாலராக காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு நிதியாண்டில் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி 3 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் ஒழுங்காற்று அமைப்புகளின் கெடுபிடிகள் அதிகரிப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வு ஆகியவை மருந்துப் பொருள்களின் ஏற்றுமதியானது குறைந்த விகிதத்தில் அதிகரிப்பதற்கு காரணமாகியது என வர்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. 
நாட்டின் ஒட்டுமொத்த மருந்துப் பொருள்களின் ஏற்றுமதியில் பிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்கா 25 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா, ரஷியா, நைஜீரியா, பிரேசில் மற்றும் ஜெர்மனி உள்ளன.
ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அந்நாடுகளில் உள்ள கடுமையான ஒழுங்காற்று விதிமுறைகள் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு தடைக் கல்லாகவே உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.