நாளுக்கு நாள் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கச்சா எண்ணெயில் விலை பேரல் ஒன்றுக்கு 54.1 டாலராக (சுமார் ரூ.3,794)ஆக இருந்தது.
சனிக்கிழமையைவிட இது 1 சதவீதத்துக்கும் மேல் குறைவு. இந்த விலை, வருகிற நாள்களில் மேலும் குறையக் கூடும் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.
இப்படி கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதற்கு என்ன காரணம்?
அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் லிபியாவில், அரசுக்கும், பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதன் காரணமாக அந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.
மேலும், அமெரிக்காவும் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை மளமளவென்று அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் கனடா போன்ற நாடுகள், தற்போது அதிக அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளன.
உக்ரைனிலும், மத்தியக் கிழக்கு நாடுகளிலும் கடுமையான அரசியல் பதற்றம் நிலவினாலும், கச்சா எண்ணெயை அந்த நாடுகள் அபரிமிதமாக உற்பத்தி செய்து வருகின்றன.
எப்போதுமே உற்பத்தியும், அளிப்பும் அதிகரிக்கும்போது விலை குறையும் என்ற விதியின் அடிப்படையில், இதுபோன்ற காரணங்களினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது.
ஈரான் மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் கச்சா எண்ணெய்ச் சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கப்படும் நிலையிலும், அந்த நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா சலுகை அறிவித்தது.
எனவே, தற்போதைய சூழலில் அந்தப் பொருளாதாரத் தடையும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைவது, இந்திய பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கவலையை சிலருக்கு ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.
""கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதால், இந்தியச் சந்தையில் எரிபொருள்களின் விலைகள் குறையும். மேலும், எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக இந்திய அரசு செலவிடும் தொகையும் பெருமளவில் மிச்சமாகும்.
இது நமது ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கே ஆரோக்யத்தை தரும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, பணவீக்கம் போன்ற விஷயங்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு, ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை ஸ்திரமாக வைத்திருக்கவும், குறைப்பதற்கும் கூட வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழல்கள் பங்குச் சந்தைக்கு சாதகமாகவே அமையும்'' என்கிறார்கள் அவர்கள்.
எனினும், இந்த விலை வீழ்ச்சி எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்தால் ஒட்டுமொத்த ஏற்றுமதி நிறுவனங்களுமே பாதிக்கப்படும் என்பதையும் சில நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இருந்தாலும், இந்தச் சூழல்கள் இறக்குமதி நிறுவனங்களுக்கு சாதமாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அந்த வகையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பங்குச் சந்தைக்கு மிகப் பெரிய பாதிப்பு இருக்காது என்றே நம்பலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


