அரசியல் நிலவரங்கள், ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பொருளாதார நிலவரங்கள் உள்ளிட்ட காரணங்களால் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் திங்கள்கிழமை 232 புள்ளிகள் சரிந்தது.
இந்தக் காரணங்களால் பங்கு வர்த்தகம் தொடர்ந்து 5-ஆவது நாளாக இறங்குமுகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வராக பதவியேற்றிருந்த பாஜக-வின் எடியூரப்பா, சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால் கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதனால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் உற்சாகமிழந்து காணப்பட்டனர்.
அத்துடன், நீரவ் மோடி முறைகேடு விவகாரம் காரணமாக பஞ்சாப் யூனியன் வங்கியின் தர வரிசை எண்ணை மூடிஸ் சந்தை ஆய்வு நிறுவனம் குறைத்தது.
இதன் காரணமாகவும் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டினர்.
இந்தச் சூழலில், திங்கள்கிழமை தொடங்கிய மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 34,880 புள்ளிகளில் தொடங்கி, 126 வரை அதிகரித்து அதிகப்பட்சமாக 34,974 புள்ளிகள் வரை சென்றது.
எனினும், பெருமளவில் பங்குகள் விற்பனைக்கு வந்த காரணத்தால் அது சரியத் தொடங்கி, இறுதியில் 34,594 புள்ளிகளாக நிலைத்தது. இதன் மூலம், மும்பை சென்செக்ஸ் திங்கள்கிழமை 232 புள்ளிகள் (0.67%) சரிவைக் கண்டது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 79.7 புள்ளிகள் (0.75%)
சரிந்து 10,505.8 புள்ளிகளாக நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தாயாகும் ஜன நாயகன் பட நடிகை!

ரெனால்ட் இந்தியா ஏப்ரல் மாத விற்பனை இரட்டிப்பு!

ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


