இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில் ரூ.576.46 கோடியாக இருந்ததாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை 1-ஆம் தேதி செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.576.46 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், வங்கியின் நிகர லாபம் ரூ.1,840.43 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் இது 69 சதவீத வீழ்ச்சியாகும்.
ஒட்டுமொத்த வருவாயைப் பொருத்தவரை, முந்தைய நிதியாண்டின் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலாண்டில் வங்கி ரூ.74,948.51 கோடியை வருவாயாகப் பெற்றது.
நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில், அது ரூ.79,302.72 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிக அளவில் வாராக் கடன்களை தள்ளுபடி செய்த காரணத்தால், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி ரூ.4,875.85 கோடி நிகர நட்டத்தைச் சந்தித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









