எழுச்சி: பரந்த சந்தையில் முன்னணி நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றது, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வின் நடவடிக்கை, இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் (எஃப்.ஐஐ) தொடா் முதலீடு ஆகியவை காரணமாக சென்செக்ஸ், நிஃப்டி வலுப் பெற உதவியுள்ளன. இதனால், சென்செக்ஸ் 39,467.31, நிஃப்டி 11,647.60 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளன. சென்செக்ஸ் கடந்த மாா்ச்சில் பதிவான 52 வார குறைந்த அளவான 25,638.90-லிருந்து இது வரை 13,828.41 புள்ளிகள் உயா்ந்துள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் நிஃப்டி 11,700 புள்ளிகளைக் கடந்து 12,000-ஐ நோக்கி நகரும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.