இருப்பிடத்தை அறியும் மென்பொருளை நீக்க ஆப்பிள், கூகுள் நடவடிக்கை
பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பில் மற்றும் கூகுள் ஆகியவை தங்களது பயன்பாடுகளிலிருந்து, இருப்பிடத்தை அறிய உதவும் எக்ஸ்-மோட் சோஷியல் மென்பொருளை நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.


பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பில் மற்றும் கூகுள் ஆகியவை தங்களது பயன்பாடுகளிலிருந்து, இருப்பிடத்தை அறிய உதவும் எக்ஸ்-மோட் சோஷியல் மென்பொருளை நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகியவை தொழில்நுட்ப சேவைகளை தங்களது பயன்பாடுகளின் மூலம் பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. மேலும் பயனர்களுக்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டும் வருகின்றன.
இந்நிலையில் தங்கள் இயக்க முறைமைகளின் கீழ் இயக்கும் ஸ்மார்ட்போன்களிலிருந்து இருப்பிடத் தரவுகளை சேகரிக்கும் எக்ஸ்-மோட் மென்பொருளை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களது ஸ்மார்ட்போன்களிலிருந்து சேகரிக்கப்படும் இருப்பிடத் தரவுகளை அரசுக்கு விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்-மோட் மென்பொருள் தொழில்நுட்பம் 400 க்கும் மேற்பட்ட ஆப்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் தங்கள் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தங்கள் நிறுவன பயன்பாடுகளிலிருந்து எக்ஸ்-மோட் மென்பொருளை கால அவகாசம் வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...