மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,861 புள்ளிகள் ஏற்றமடைந்துள்ளன.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவ்வப்போது கடும் சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகம் 1,861.75 புள்ளிகள் உயர்ந்து 28,535.78 புள்ளிகளில் நிலைத்தது. இது முந்தைய வர்த்தகத்தைக் காட்டிலும் 6.98 சதவீதம் அதிகமாகும். முன்னதாக, 26,674.03 புள்ளிகளில் நிறைவடைந்த பங்குச் சந்தை வர்த்தகம், புதன்கிழமை 26,499.81 புள்ளிகளில் தொடங்கியது. இன்றைய தினத்தில் அதிகபட்சமாக 28,790.19 புள்ளிகளிலும், குறைந்தபட்சம் 26,359,91 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகம் நிஃப்டி 516.80 புள்ளிகள் உயர்ந்து 8,317.85 புள்ளிகளில் நிலைத்தது. இது முந்தைய வர்த்தகத்தைக் காட்டிலும் 6.62 சதவீதம் அதிகமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


