மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமெரிக்கத் தேர்தல் எதிரொலி: பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கிய நிலையில் மாலையில் வர்த்தகம் உயர்வுடன் நிறைவு பெற்றது.

News image
அமெரிக்கத் தேர்தல் எதிரொலி: பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் நிறைவு (கோப்புப்படம்)
Updated On :5 நவம்பர் 2020, 11:35 am

DIN

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கிய நிலையில் மாலையில் வர்த்தகம் உயர்வுடன் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 724.02 புள்ளிகள் உயர்ந்து 41,340.16 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.78 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 211.80 புள்ளிகள் உயர்ந்து 12,120.30 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.78 சதவிகிதம் உயர்வாகும்.

வர்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக எஸ்.பி.ஐ வங்கி, டாடா ஸ்டீல், இந்துஸ்இந்த் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.

நேற்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் ஏற்றத்துடன் காணப்பட்ட இன்போஸிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் சரிவைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி., பஜாஜ் ஆட்டோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

இந்தியச் சந்தையில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக இன்று இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

இதேபோன்று கடந்த வாரம் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை வர்த்தகம் அமெரிக்கத் தேர்தல் எதிரொலி காரணமாக தற்போது தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.