கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச்சந்தை வணிகம் இன்றும் உயர்வுடன் தொடங்கியது

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்றைத் தொடர்நது இன்றும் உயர்வுடன் தொடங்கியது.

News image

நேற்றைத் தொடர்ந்து இன்றும் உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம் (கோப்புப்படம்)

Updated On :5 நவம்பர் 2020, 5:19 am

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்றைத் தொடர்ந்து இன்றும் உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 183.86 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய நிலையில், இன்று 657.91 புள்ளிகள் உயர்ந்து 41,233.97 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.53 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்று 49.50 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய நிலையில், இன்று 178.75 புள்ளிகள் உயர்ந்து 12,091.20 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.52 சதவிகிதம் உயர்வாகும்.

அதிகபட்சமாக டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கம் முதலே ஏற்றம் கண்டுள்ளன.

நேற்று இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் ஏற்றம் கண்ட நிலையில் இன்று 2.34 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.