கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்; சென்செக்ஸ் 400 புள்ளிகள் ஏற்றம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

News image
Updated On :11 நவம்பர் 2020, 5:33 am

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்தது. நிஃப்டியும் 12,650 புள்ளிகளாக உயர்ந்து வர்த்தகமானது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 293.42 புள்ளிகள் உயர்ந்து 43,558 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.65 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104.50 புள்ளிகள் உயர்ந்து 12,725 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.76 சதவிகிதம் உயர்வாகும்.

பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. இதேபோன்று கோட்டாக், எஸ்.பி.ஐ., எம்&எம், ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்வுடன் காணப்பட்டன.

வோடாபோன், அசோக் லேலண்ட், நெஸ்ட்லே ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதிகபட்சமாக இந்துஸ்இந்த் வங்கி 3.16 சதவிகிதம் சரிவைச் சந்தித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.