கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்

கடந்த 2 நாள்களாக உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வணிகம் இன்று காலை சரிவுடன் தொடங்கியது.

News image

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம் (கோப்புப்படம்)

Updated On :19 நவம்பர் 2020, 5:04 am

கடந்த 2 நாள்களாக உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வணிகம் இன்று காலை சரிவுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 277 புள்ளிகள் சரிந்து  44,024 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.46 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் சரிந்து 12,900 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.32 சதவிகிதம் சரிவாகும்.

பங்குச்சந்தையில் கடந்த இரண்டு நாள்களாக 50 சதவிகிதத்திற்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய வங்கிகளின் பங்குகள் சரிந்தன.

பங்குச்சந்தை வணிகத்தில் அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வீஸ் நிறுவனப் பங்கு 4.74 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் 2.90 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.30 சதவிகிதமும், எம் & எம் நிறுவனப் பங்கு 1.89 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.