மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை புள்ளிகள் நேற்று வரலாறு காணாத வகையில் சரிந்த நிலையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கின.

News image
பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் தொடக்கம் (கோப்புப்படம்)
Updated On :16 அக்டோபர் 2020, 5:04 am

DIN

பங்குச்சந்தை புள்ளிகள் நேற்று வரலாறு காணாத வகையில் சரிந்த நிலையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கின.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 311.22 புள்ளிகள் உயர்ந்து 40039.63 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 0.79 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 11760.40 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.68 சதவிகிதம் உயர்வாகும்.

இந்திய பங்குச்சந்தைககள் நேற்று வரலாறு காணாத அளவில் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்த நிலையில் இன்று சற்று ஏற்றத்துடன் பங்குச்சந்தைகள் துவங்கியுள்ளன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.