பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்த நிலையில், இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்ந்து 40,773.85 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.2 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 11,945.35 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.41 சதவிகிதம் உயர்வாகும்.
அதிகபட்சமாக பவர் கிரிட் 2.97 சதவிகிதமும், மாருதி சுசூகி 2.85 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. வர்த்தகத்தின் நேற்றைய தொடக்கத்தில் வங்கித்துறை பங்குகள் சரிவை சந்தித்த நிலையில், இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்றம் கண்டுள்ளன.
கடந்த நான்கு நாள்களாக பங்குச்சந்தை வர்த்தகம் உயர்ந்து வந்த நிலையில் நேற்று சரிவைக் கண்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித்துறை பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததன் எதிரொலியாக பங்குச்சந்தை சரிவை சந்தித்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


