புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. 

News image
பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு
Updated On :3 ஆகஸ்ட் 2021, 11:06 am

DIN

வர்த்தக நேர முடிவில் செவ்வாய்க் கிழமை (ஆக. 3) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 872.73 புள்ளிகள் உயர்ந்து 53,823.36 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.65 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 245.60 புள்ளிகள் உயர்ந்து 16,130.75 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.55 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 27  நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

இதில் அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி பங்குகள் 3.89 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 3.72 சதவிகிதமும், இந்துஸ்இந்த் வங்கி 3.39 சதவிகிதமும், நெஸ்ட்லே இந்தியா 3.27 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.