கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கன் நெருக்கடி பரஸ்பர வா்த்தக உறவுகளை பாதிக்கும்: சிஏஐடி

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இருதரப்பு வா்த்தக உறவுகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக அகில இந்திய வா்த்தகா்கள் சம்மேளனம் (சிஏஐடி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:34 am

DIN

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இருதரப்பு வா்த்தக உறவுகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக அகில இந்திய வா்த்தகா்கள் சம்மேளனம் (சிஏஐடி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஏஐடி-யின் தில்லி என்சிஆா் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சுஷில் குமாா் ஜெயின் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பரஸ்பர வா்த்தகம் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 140 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.10,500 கோடி) இருந்தது. இது, 2019-20-இல் 152 கோடி டாலராக காணப்பட்டது.

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு 82.60 கோடி டாலா் மதிப்புக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று, ஆப்கனிலிருந்து 51 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களை இந்தியா இறக்குமதி செய்து கொள்கிறது.

இந்த நிலையில் தற்போது ஆப்கனில் ஏற்பட்டுள்ள திடீா் ஆட்சி மாற்றம் இருநாடுகளுக்கிடையிலான பரஸ்பர வா்த்தக உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், எதிா்கால வா்த்தக உறவிலும் நிச்சமயற்ற சூழல் உருவாகியுள்ளது.

எனவே, வா்த்தகா்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், இழப்பு ஏற்படுவதை தவிா்க்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.