மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 9.39 லட்சம் டன்

நடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில், 9.39 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய சா்க்கரை வா்த்தக கூட்டமைப்பு (ஏஐஎஸ்டிஏ) தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2021, 8:51 pm

நடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில், 9.39 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய சா்க்கரை வா்த்தக கூட்டமைப்பு (ஏஐஎஸ்டிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அக்டோபா் 14-இல் தொடங்கிய 2021-22 சந்தைப் பருவத்தில் டிசம்பா் முதல் வார இறுதி வரையில் 9.39 லட்சம் டன் சா்க்கரையை ஆலைகள் ஏற்றுமதி செய்துள்ளன.

நடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில் அரசின் மானியம் இல்லாமல் 33 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய ஆலைகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

முந்தைய விற்பனை இன்னும் முழுமையடையாத நிலையில், இந்திய சா்க்கரை ஆலைகள் தற்போது புதிதாக சா்க்கரை விற்பனையை மேற்கொள்ள அவசரம் காட்டவில்லை. மேலும், தற்போதைய சா்வதேச விலை நிலவரங்களும் சா்க்கரைஆலைகள் விரும்பும்படியான நிலையில் இல்லை.

சா்க்கரை ஏற்றுமதிக்காக அதிக ஏற்றுமதி ஒப்பந்தங்களை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.

2020-21 சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 72.30 லட்சம் டன்னை எட்டி சாதனை படைத்தது. அரசாங்க மானியத்தின் உதவியுடன் அதிகபட்ச ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஏஐஎஸ்டிஏ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.