மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 9.39 லட்சம் டன்

நடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில், 9.39 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய சா்க்கரை வா்த்தக கூட்டமைப்பு (ஏஐஎஸ்டிஏ) தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2021, 8:51 pm

DIN

நடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில், 9.39 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய சா்க்கரை வா்த்தக கூட்டமைப்பு (ஏஐஎஸ்டிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அக்டோபா் 14-இல் தொடங்கிய 2021-22 சந்தைப் பருவத்தில் டிசம்பா் முதல் வார இறுதி வரையில் 9.39 லட்சம் டன் சா்க்கரையை ஆலைகள் ஏற்றுமதி செய்துள்ளன.

நடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில் அரசின் மானியம் இல்லாமல் 33 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய ஆலைகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

முந்தைய விற்பனை இன்னும் முழுமையடையாத நிலையில், இந்திய சா்க்கரை ஆலைகள் தற்போது புதிதாக சா்க்கரை விற்பனையை மேற்கொள்ள அவசரம் காட்டவில்லை. மேலும், தற்போதைய சா்வதேச விலை நிலவரங்களும் சா்க்கரைஆலைகள் விரும்பும்படியான நிலையில் இல்லை.

சா்க்கரை ஏற்றுமதிக்காக அதிக ஏற்றுமதி ஒப்பந்தங்களை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.

2020-21 சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 72.30 லட்சம் டன்னை எட்டி சாதனை படைத்தது. அரசாங்க மானியத்தின் உதவியுடன் அதிகபட்ச ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஏஐஎஸ்டிஏ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.