’காளை' ஆதிக்கத்தில் பங்குச் சந்தை : ஒரே நாளில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு
பங்குச் சந்தை ஏற்றத்தால் மீண்டும் சென்செக்ஸ் 58,000 புள்ளிகளைக் கடந்திருக்கிறது.


பங்குச் சந்தை ஏற்றத்தால் மீண்டும் சென்செக்ஸ் 58,000 புள்ளிகளைக் கடந்திருக்கிறது.
கடந்த சில வாரமாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வரும் பங்குச் சந்தை 2 நாள்களாக உயர்ந்து வருகிறது.
இதனால், நேற்று(டிச.7) 57,633.14 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,158.36 புள்ளிகளில் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1016.03 புள்ளிகள் உயர்ந்து 58,649.68 புள்ளிகளுடன் நிலைபெற்றது .
17,315.25 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 293.05 புள்ளிகள் அதிகரித்து 17,469.75 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் தொடர்ந்து ஏற்றமும் இறக்கமும் அடைந்து வருகிற பங்குச்சந்தையில் 2 வார இடைவெளிக்குப் பின் சென்செக்ஸ் ஒரே நாளில் 1,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...