பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

2 நாள்கள் வீழ்ச்சியிலிருந்து மீண்ட பங்குச்சந்தை

பங்குச்சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது. காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்வுடன் முடிவடைந்தது.

News image
Updated On :11 பிப்ரவரி 2021, 11:26 am

DIN

பங்குச்சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது. காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்வுடன் முடிவடைந்தது.

ரிலையன்ஸ் மற்றும் உலோக விற்பனைத் துறை பங்குகள் பங்குச்சந்தை எழுச்சியுடன் முடிவடைய காரணமாக அமைந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய (பிப். 11) மாலை வர்த்தக நேர முடிவில் 222.13 புள்ளிகள் உயர்ந்து 51,531.52 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் 0.43 சதவிகிதமாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 66.80  புள்ளிகள் உயர்ந்து 15,173.30 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.44 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் தர 30 நிறுவனங்களின் பங்குகளில் 15 நிறுவனங்களில் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனம் 4.07 சதவிகிதமும், சன் பார்மா 2.62 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.60 சதவிகிதம், பவர் கிரிட் 1.59 சதவிகிதமும் உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.