தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பெட்ரோல் விலை: தில்லியில் முதல் முறையாக ரூ.85-ஐ தொட்டது

தலைநகர் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை முதல் முறையாக ரூ.85-ஐ எட்டியுள்ளது. டீசல் விலையும் இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.

News image
பெட்ரோல் விலை: தில்லியில் முதல் முறையாக ரூ.85-ஐ தொட்டது
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN


புது தில்லி: தலைநகர் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை முதல் முறையாக ரூ.85-ஐ எட்டியுள்ளது. டீசல் விலையும் இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை 22 காசுகளும், டீசல் விலை 24 காசுகளும் உயர்த்தப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

இதனால், தில்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85.20க்கும், மும்பையில் ரூ.91.80க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.85க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை தேசிய தலைநகரில் லிட்டருக்கு ரூ.75.38க்கும், மும்பையில் இதுவரை காணாத அளவுக்கு ரூ.82.13க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.80.67க்கு விற்பனையாகிறது.

திங்கள்கிழமையும், பெட்ரோல், டீசல் விலை தலா 25 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், இன்றும் உயர்வு கண்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.