பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் தொடக்கம்

ஐந்து நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (ஜன.29) காலை உயர்வுடன் தொடங்கியது.

News image
பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் தொடக்கம்
Updated On :29 ஜனவரி 2021, 4:59 am

DIN

5 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (ஜன.29) காலை உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 159.46 புள்ளிகள் உயர்ந்து 47,033.82 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.14 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52.25 புள்ளிகள் உயர்ந்து 13,869.80 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.13 சதவிகிதம் உயர்வாகும்.

கடந்த 5 நாள்களாக சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை வர்த்தகம் வாரத்தின் இறுதி நாளான இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.

ஐந்து நாள்கள் வா்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் 2,917.76 புள்ளிகளையும், நிஃப்டி 827.15 புள்ளிகளையும் இழந்துள்ளன.

இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக எம்&எம் 4.12 சதவிகிதமும், இந்துஸ்இந்த் வங்கி 3.54 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 1.42 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.