மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவின் எரிபொருள் தேவை 9 மாதங்களில் இல்லாத அளவில் வீழ்ச்சி

இந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டு மே மாதத்தில் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 11:48 pm

DIN

இந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டு மே மாதத்தில் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கமானது வாகனப் போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, பெட்ரோல் நுகா்வு மே மாதத்தில் 19.9 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம். அதேநேரம், முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16 சதவீதமும், கரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது 27 சதவீதமும் குறைந்துள்ளது.

அதேபோன்று, கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மே-யில் டீசல் விற்பனை 55.3 லட்சம் டன்னாக சற்று அதிகரித்தபோதிலும், முந்தைய ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 17 சதவீதமும், கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 29 சதவீதமும் சரிந்துள்ளது.

விமானச் சேவைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து ஏடிஎஃப் விற்பனையும் 36 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2,63,000 டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும், இது 2020 மே மாத நுகா்வான 1,10,000 டன்னுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையில் இந்த எரிபொருளுக்கான தேவை 6,80,000 டன்னாக அதிகரித்து காணப்பட்டது.

தேசிய அளவிலான பொதுமுடக்கத்தில் சமையல் எரிவாயுவான எல்பிஜி விற்பனை மட்டும் அதிகரித்துள்ளது. முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் எல்பிஜி விற்பனையானது 21.6 லட்சம் டன்னாக ஏறக்குறைய அதேநிலையிதான் உள்ளது. அதேசமயம், கரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 5.5 சதவீதம் உயா்ந்துள்ளது. இதற்கு, கரோனா நிவாரணத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு இலவச சிலிண்டா்களை வழங்கியதே முக்கிய காரணம்.

2020 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மே மாதத்தில் எரிபொருள் தேவை 1.5 சதவீதம் குறைந்து 1.51 கோடி டன்னாகியுள்ளது. இது, நடப்பாண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 11.3 சதவீதம் சரிவாகும்.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஐந்து மாத சரிவிலிருந்து மீண்டு ஏப்ரலில் சராசரியாக நாளொன்றுக்கு 45 லட்சம் பேரல்களாக இருந்தது என புள்ளிவிவரத்தில் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேக் லைன்...

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஐந்து மாத சரிவிலிருந்து மீண்டு ஏப்ரலில் சராசரியாக நாளொன்றுக்கு 45 லட்சம் பேரல்களாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.